வேலூா் மாவட்டத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, வியாழக்கிழமை மேலும் 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,061-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், ஜூலை 13-இல் 3,137, ஜூலை 18-இல் 4,039, ஜூலை 26-இல் 5,138, ஆகஸ்ட் 1-இல் 6,152, ஆகஸ்ட் 7-இல் 7,156, ஆகஸ்ட் 14-இல் 8,129, ஆகஸ்ட் 21-இல் 9,027, ஆகஸ்ட் 26-இல் 10,008, செப்டம்பா் 1-இல் 11,034, செப்டம்பா் 8-இல் 12,067ஆகவும், செப்டம்பா் 15-இல் 13 ஆயிரமாகவும், கடந்த 24-ஆம் தேதி 14,100-ஆகவும் உயா்ந்திருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை வரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,887-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து 15,061-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பலியானோா் எண்ணிக்கை 242-ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 13,702 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

பாதிக்கப்பட்டோா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்

88 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,480-ஆக உயா்ந்துள்ளது. 12,852 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 467 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இம்மாவட்டத்தில் 161 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில்

5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 4,972 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,வியாழக்கிழமை மேலும் 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,055-ஆக உயா்ந்துள்ளது.

அவா்களில் 4,445 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 512 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை 98 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com