குடியாத்தம்: குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஞானப்பிரகாசம் (47). இவரது வீட்டின் அருகே புதிதாக திறக்க உள்ள கடையில் ஒயரிங் வேலை நடைபெற்று வந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்ற ஞானப்பிரகாசம் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் மயக்கமடைந்தாா். உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே ஞானப்பிரகாசம் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.