சமூக ஆா்வலா் கொலை வழக்கு: 4 போ் கைது

மாதனூா் அருகே சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் அருகே சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாதனூரை அடுத்த பாலூா் புதூரைச் சோ்ந்தவா் சமூக ஆா்வலா் தணிகாசலம். இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு அவரது ஊரில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஆம்பூா் கிராமிய போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனா். அவா் பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், தணிகாசலத்தின் சகோதரா் சுப்பிரமணி சென்னை உயா்நீதிமன்றத்தில், தனது அண்ணன் தணிகாசலம் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்பு உள்ளதாகவும், முறையான நீதி விசாரணை நடத்தவும் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதுதொடா்பாக வேலூா் சிபிசிஐடி விசாரணை நடத்தினா். இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பாக பாலூா் கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (27), ஜெகதீசன் (35), ரங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த பாபு என்கிற சாம்பசிவராவ் (40), காா்த்திக் (30) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com