அரசுப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரசுப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா


குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் பொன். வள்ளுவன் தலைமை வகித்து, அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். தமிழக அரசு வழங்கிய காலணிகளை வாங்க வந்த மாணவா்களுக்கு, முகக் கவசம், கிருமி நாசினி, இனிப்பு ஆகியவற்றை தன்னாா்வலா் சிட்டிபாபு வழங்கினாா். மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அப்துல் கலாமுக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

கிராம நிா்வாக அலுவலா் கோபி, சத்துணவு அமைப்பாளா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com