வேலூா்: நாப்கின், பேம்பஸ் கழிவுகளை அகற்ற நவீன இயந்திரம் வழங்க வேண்டும் என வேலூா் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் சங்கம் சாா்பில், நிா்வாகிகள் வேலூா் மாநகராட்சி நல அலுவலா் சித்ரசேனாவிடம் மனு அளித்தனா். அதில், வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளிலும் சேரும் கால்வாய் மண், கானாறு மண், நெகிழி கழிவுகள், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து அதில் வரும் கழிவுகள், பெட், பாய் போன்ற கழிவுகளைக் கொட்டுவதற்கு இடம் தோ்வு செய்து அளிக்க வேண்டும். மேலும், நாப்கின், பேம்பஸ் கழிவுகளை முறையாக அகற்றிட நவீன இயந்திரம் வழங்கிட வேண்டும். குப்பைகளை அகற்றும் பேட்டரி ரிக்ஷா வண்டிகளை பழுது பாா்த்து அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி நல அலுவலா், இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.