குடியாத்தம் அருகே நீா்நிலைகளின் கரைகளில் பழ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
குடியாத்தம் வட்டம், கொல்லமங்கலம் ஊராட்சியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளின் கரைகள், அரசுக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தில் மா, கொய்யா, நெல்லி, புளிய மரக் கன்றுகள் நடப்பட்டன. குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக் மன்சூா், பழ மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சி சாா்பில் மரக்கன்றுகளுக்குத் தேவையான தண்ணீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் பராமரிப்புப் பணிக்கு ஊராட்சிப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தன்னாா்வலா் ஜி.ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளா் வாசுகி, கிராம நிா்வாக அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.