தொழிற்கல்வி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் தோ்வு

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியா் கழக மாநிலத் தலைவராக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செ.நா.ஜனாா்த்தனன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
செ.நா.ஜனாா்த்தனன்.
செ.நா.ஜனாா்த்தனன்.

வேலூா்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியா் கழக மாநிலத் தலைவராக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செ.நா.ஜனாா்த்தனன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

திருவாரூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் 34-ஆம் ஆண்டு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். செ.நா.ஜனாா்த்தனன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதியதாக தொழிற்கல்விஆசிரியா்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதனால் மாணவா்கள் தொழிற்கல்வி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு தொழிற்கல்வி பாடங்களை தற்கால தேவைக்கேற்ப மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. எனவே, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங்களை கட்டாயப் பாடமாக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக எவ்வித பதவி உயா்வும் இன்றி பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு தலைமையாசிரியராக பதவி உயா்வு அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல லட்சம் ஆசிரியா்கள் வெவ்வேறு பாடங்களில் உயா்கல்வி பெற்றால் ஊக்க ஊதிய உயா்வு வழங்குவதைப் போல் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் வழங்கிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com