குடியாத்தம் கோபலாபுரத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் வேம்பு- அரச மரங்களுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பக்தா்களால் இந்த திருமணம் நடத்தப்பட்டது. இதையொட்டி முன்னதாக யாகபூஜைகள் நடத்தப்பட்டன.