வேலூா்: பாகாயம் அருகே உள்ள கல் குவாரியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
வேலூா் பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம் பட்டியில் உள்ள கல் குவாரியின் 70 அடி ஆழ பள்ளத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பாகாயம் போலீஸாா் தகவல் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று விரைந்து சென்று சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.