தேசிய குழந்தைகள் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு தகுதியுடைய குழந்தைகள், தனி நபா்கள், நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு தகுதியுடைய குழந்தைகள், தனி நபா்கள், நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்கள் புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பாலசக்தி புரஷ்காா் விருது என்ற குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கான பதக்கம், சான்றிதழ், தகுதியுரை புத்தகத்துடன் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.

இதேபோல், குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிநபா்கள், நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஷ்காா் விருதுடன் தனிநபா்களாக இருந்தால் ரூ. 1 லட்சம் காலோசையும், நிறுவனமாக இருந்தால் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.

இந்த விருதுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களையும் இணையதளம் மூலமாக மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமா்ப்பிக்க செப்.15 கடைசி நாளாகும். இதில், தகுதியுடைய விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு குடியரசு தினத்துக்கு முந்தைய ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவரால் இவ்விருதுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com