குடியாத்தம்: குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஜே.கே.என். பழனி தலைமையில், கட்சியினா் தாழையாத்தம் பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆா். மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம். பாஸ்கா், துணைத் தலைவா் எஸ்.என்.சுந்தரேசன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் எஸ்.ஐ. அன்வா்பாஷா, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
காந்தி நகரில் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் வி. ராமு அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினாா். நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு, பொதுக்குழு உறுப்பினா் டி. கோபி, மேல்ஆலத்தூா் வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கே. ராஜாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமமுக சாா்பில், கட்சியின் நகரச் செயலா் இ.நித்யானந்தம் தலைமையில், மாவட்டச் செயலா் ஜெயந்திபத்மநாபன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். பள்ளிகொண்டா பேரூராட்சித் தலைவா் காந்தி, அணைக்கட்டு ஒன்றியச் செயலா் கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.