யானை மிதித்து விவசாயி பலி


குடியாத்தம்: ஆந்திர மாநிலம், யாதமுரி அருகே யானை மிதித்து, விவசாயி உயிரிழந்தாா்.

தமிழக எல்லையான, பரதராமியிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் சித்தூா் செல்லும் சாலையில் உள்ளது யாதமுரி.

இதையொட்டி, வன எல்லையில் அமைந்துள்ளது தஞ்சாவூா் கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளையன் (52), வியாழக்கிழமை காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து, நிலத்துக்கு சென்றாா். வழியில் ஒரு குட்டி உள்பட 7 யானைகள் கூட்டமாக நின்றுள்ளன.

அதில் ஒரு யானை தும்பிக்கையால், வெள்ளையனை தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா். இது குறித்து யாதமுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com