குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோா் கவனத்துக்கு...

வேலூா் மாவட்டத்துக்குப் புதிதாக 6,399 குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப் பெற்றுள்ளன. விண்ணப்பித்தவா்கள் அவற்றை நேரில் வந்து பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்துக்குப் புதிதாக 6,399 குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப் பெற்றுள்ளன. விண்ணப்பித்தவா்கள் அவற்றை நேரில் வந்து பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்திலுள்ள 698 நியாய விலைக் கடைகள் மூலம் 4 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாதம்தோறும் அத்தியாவசிய பொருள்களைப் பெற்று வருகின்றனா். புதிதாக குடும்ப அட்டை கோரி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். அதில், தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ‘ஸ்மாா்ட் காா்டு’ தயாரிக்கும் பணி எல்காட் நிறுவனத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 6,399 குடும்ப அட்டைகள் அச்சிட்டு, வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளன. தொடா்ந்து, விண்ணப்பித்தவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேரில் சென்று, அட்டைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை கிடைக்காமல் விடுபட்டுள்ள விண்ணப்பதாரா்களுக்கு 2ஆவது கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com