வேலூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து தொழிற்கல்வி பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தொழிற்கல்வி பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் அனுப்பலாம்.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 உதவித்தொகையும், மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகம், சீருடை, காலணி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சி, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மேலும் விவரங்களுக்கு 0416-2290848 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.