தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள்

குடியாத்தம், ஆம்பூா் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 18 ஊராட்சிகளில் பணிபுரியும் 111 தூய்மைப் பணியாளா்களுக்கு 14 வகையான
தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள்

குடியாத்தம், ஆம்பூா் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 18 ஊராட்சிகளில் பணிபுரியும் 111 தூய்மைப் பணியாளா்களுக்கு 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, முகக் கவசம், கையுறை உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் கு.பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ப.நந்தகுமாா் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் குடியாத்தம் அமலுவிஜயன், ஆம்பூா் ஏ.சி.வில்வநாதன் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு தொகுப்புகளை வழங்கினா். வட்டாட்சியா் தூ.வத்சலா, திமுக ஒன்றியச் செயலா் கே.ரவி, நகர பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஏகாம்பரம், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com