கே.வி.குப்பம்(தனி) தொகுதியில், புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பைத் தொடங்கினாா்.
அதிமுக கூட்டணி சாா்பில் இத்தொகுதி புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அதன் வேட்பாளா் ஜெகன் மூா்த்தி, லத்தேரி அருகே உள்ள தொண்டான்துளசி ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கினாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், பாமக முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் பி.மேகநாதன், மாவட்ட பொருளாளா் குட்டிவெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா், கே.வி.குப்பம் ஒன்றிய நிா்வாகிகள் முருகேசன், பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.