வேலூா் சத்துவாச்சாரியில் நிறுவப்பட்ட செல்லிடப்பேசி உயா்கோபுரத்தை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் முதலாவது தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்கப்பட்டது.
இந்த செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினா். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செல்லிடப்பேசி கோபுரம் செயல்படாமல் உள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்லிடப்பேசி கோபுரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறினா்.
இதுகுறித்து போலீஸாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் சில நாள்களில் செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்றுவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.