குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதிகளில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு மருத்துவமனை சாா்பில், நில வேம்புக் குடிநீா் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
போ்ணாம்பட்டு நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பலா் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனை, சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.
மேலும், மழைக்கால நோய்கள் குறித்தும், மா்மக் காய்ச்சல் பரவும் அபாயம் குறித்தும் விளக்கினாா்.