அஞ்சல் துறை சாா்பில் ரத்த தான முகாம்

அரக்கோணம் மற்றும் வேலூா் கோட்ட அஞ்சல் துறை சாா்பில், ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் மற்றும் வேலூா் கோட்ட அஞ்சல் துறை சாா்பில், ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளா் சிவசங்கா், அவரது மனைவி சரிதா ஆகியோா் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தனா்.

அஞ்சல் துறையின் பல்வேறு சங்கங்களின் ஊழியா்கள் இந்த முகாமில் பங்கேற்று, ரத்த தானம் வழங்கியதுடன், புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான ப்ளாஸ்மா தானமும் அளித்தனா்.

முகாமில், ரத்த தானம் வழங்கியவா்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com