ஆசிரியையிடம் ரூ.2.17 கோடி மோசடி: 4 போ் மீது வழக்கு

காட்பாடியில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், மற்றொரு ஆசிரியை உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காட்பாடியில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், மற்றொரு ஆசிரியை உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காட்பாடி திருநகரைச் சோ்ந்தவா் ஜான்சிராணி (49). அரக்கோணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இவா், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது :

வேலூா் கொணவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியை மகேஸ்வரி, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானாா். நட்பாக பழகி வந்த நிலையில், அடிக்கடி குடும்பச் செலவு உள்ளிட்டவற்றுக்கு எனக் கூறி பண உதவி கேட்டனா்.

அதன்படி, 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரை மொத்தம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் தொகையை பல தவணைகளில் மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு கொடுத்தேன். திரும்பக் கேட்டால் கொடுக்க மறுத்ததுடன் மிரட்டியும் வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, எனது பணத்தை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆசிரியை மகேஸ்வரி உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com