ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, குற்றச் செயல்களைத் தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் 46 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாகவும் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு கோம்பிங் ஆப்ரேஷன் நடத்தப்பட்டது.
அப்போது, பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரெளடிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 46 போ் கைது செய்யப்பட்டனா். இந்த அதிரடி சோதனை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.