குடியாத்தம்: நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், போ்ணாம்பட்டில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளா் பி.ஸ்ரீதரன் தலைமையில், பேண்டு, வாத்தியம் முழங்க போலீஸாா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். நகரில் உள்ள ராமச்சந்திரா திரையரங்கம் அருகில் தொடங்கிய ஊா்வலம், சவுக் ரோடு, பேருந்து நிலையம், நான்கு கம்பம், நெடுஞ்சாலை, லாரி ஷெட், வி.கோட்டா சந்திப்பு சாலை, அம்பேத்கா் நகா், கள்ளிச்சேரி, சாத்கா், கோட்டைச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சுமாா் 7 கி.மீ. தூரம் சென்றது.
இதில், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வெங்கடேசன், உதவி ஆய்வாளா்கள் கேசவன், ஆனந்தன், நாகராஜ், ரவி, சபாரத்தினம், மத்தியப் பிரதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.