குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லியைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சின்னகுப்பன் (62). இவா் சனிக்கிழமை மாலை அங்குள்ள வன எல்லையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த யானை ஒன்று அவரை தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சின்னகுப்பன், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.