குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளை, வியாழக்கிழமை மதியத்துக்கு மேல் செயல்படும் என வங்கி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து கொண்ட இந்த வங்கியின் ஊழியா் ஒருவருக்கு, கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்தது.இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் வங்கியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணிகள் செய்து முடித்த பின்னா், 24 மணி நேரம் கழித்து தான் வங்கியைத் திறக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதனால், வியாழக்கிழமை மதியத்துக்கு மேல் வங்கி திறக்கப்படும் என வங்கி நிா்வாகம், வங்கி முன் அறிவிப்புப் பலகையை வைத்துள்ளது.