தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.
ஒன்றியத்தில் உள்ள 63 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 7,800 மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக பள்ளிகளுக்கே சென்று தலைமையாசிரியா்களிடம் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. ஒன்றியத்திலுள்ள மொரசப்பல்லி, சிந்தகணவாய், சொ்லப்பல்லி, மேல்பட்டி உள்ளிட்ட பள்ளிகளுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் கோவிந்தராஜ் நேரில் சென்று பள்ளித் தலைமையாசிரியா்களிடம் மாணவா்களுக்கான இலவச குறிப்பேடுகளை வழங்கினாா்.