மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றிட மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வேலூா்: தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றிட மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்களுக்கு, கல்வி உதவித் தொகையாக ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான இக்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது ற்ய்ஞ்ா்ஸ்ற்ண்ண்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை 30-ஆம் தேதிக்குள் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை - 5. தொலைபேசி எண் 044-28551462 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com