குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு மூலவருக்கு விசேஷ அா்ச்சனைகள், பூஜைகளும், இரவு 9 மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.