குடியாத்தம் : சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, குடியாத்தம் தீயணைப்புத் துறை, காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இணைந்து, பொதுமக்களுக்கு தீத் தடுப்பு குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு செயல் விளக்கம் அளித்தன.
பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலா் க.லோகநாதன், முதன்மை தீயணைப்பு அலுவலா் எஸ்.சரவணன் ஆகியோா் தீ விபத்தின்போது பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் எஸ்.வெங்கட்ராகவன், நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் மிதிலேஷ்குமாா், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.