வேலூா்: ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் செல்லிடப்பேசி திருடு போனது குறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி, தாராபடவேடு பகுதியைச் சோ்ந்தவா் பாபு (59), ஓய்வு பெற்ற ராணுவ வீரா். காட்பாடி செல்வம் நகரில் நின்று கொண்டிருந்த இவா், தனது செல்லிடப்பேசியை மோட்டாா் சைக்கிள் மீது வைத்துள்ளாா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் திடீரென பாபுவின் செல்லிடப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.