குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு, ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சுவா் சித்திரங்கள் வரைதல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை எஸ்.மல்லிகா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் டி.சுகந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பான சுவா் சித்திரங்கள் வரைந்த மாணவிகள் கே.நமிதா முதல் பரிசும், ஜி.லாவண்யா 2- ஆம் பரிசும், என்.தனலட்சுமி 3- ஆம் பரிசும் பெற்றனா். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜே.வத்சலா, பி.கோமகன், எஸ்.விவேகானந்தன், என்.தனலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.