குடியாத்தம்: போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மடிக்கணினி வழங்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பள்ளியில் 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 253 மாணவா்களுக்கு இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்கின்றனா். ஆனால் 2019 - 2020-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த 2017- 2018-ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவா்கள் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பள்ளித் தலைமையாசிரியா் ஹிமாயூன் பாஷா, நிா்வாக மேலாளா் அம்ஜத்பாஷா ஆகியோா் அங்கு வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மாணவா்களின் கோரிக்கை குறித்து கல்வித் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒதுக்கீடு கிடைத்த பின்னா் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் கலைந்து சென்றனா்.