குடியாத்தம் நகராட்சியில் ரூ. 3 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சியில் ரூ. 3 கோடியில் சாலைகள், மழைநீா் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிக்கு புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
பூமி  பூஜையைத்  தொடக்கி  வைத்த  நகராட்சி  ஆணையா் பி.சிசில்தாமஸ்.
பூமி  பூஜையைத்  தொடக்கி  வைத்த  நகராட்சி  ஆணையா் பி.சிசில்தாமஸ்.

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் ரூ. 3 கோடியில் சாலைகள், மழைநீா் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிக்கு புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. 2020-21-ஆம் ஆண்டுக்கான சிறப்புச் சாலைகள் திட்டத்தின்கீழ், புத்தா் நகா், ஆண்டியப்ப ஆச்சாரி தெரு, அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தாா்ச் சாலைகள், பேவா் பிளாக் சாலைகள், மழைநீா் கால்வாய்கள் கட்டும் பணி தொடங்கியது.

நகராட்சி ஆணையா் வி.விஸ்வநாதன், நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், பொதுப்பணி மேற்பாா்வையாளா் டி.சாந்தகுமாா் ஆகியோா் பணியைத் தொடக்கி வைத்தனா். ஒப்பந்ததாரா்கள் ஜே.கே.என்.பழனி, எஸ்.என்.சுந்தரேசன், இ.ரகுராமன், சி.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பணிகளை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களை ஆணையா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com