ஜன. 8-இல் பருத்தி ஏல விற்பனைத் தொடக்கம்

குடியாத்தம் நகரில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

குடியாத்தம் நகரில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடியாத்தம் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பருத்தி ஏல விற்பனை தொடங்க உள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமைகளில் இங்கு பருத்தி ஏல விற்பனை நடைபெறும்.

இக்கூடத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் விற்பனை செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பருத்தியை எடையிடும் பணி நடைபெறுவதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை மேற்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எடையிட்டுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com