குடியாத்தம் நகரில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜா், அம்பேத்கா், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோரின் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வேலூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக, போ்ணாம்பட்டைச் சோ்ந்த கு.சுரேஷ்குமாா் நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா் கட்சியினருடன் சென்று தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகி நயீம் பா்வாஸ், வட்டாரத் தலைவா்கள் எம்.வீராங்கன், சங்கா், ஜாா்ஜ், லோகிதாஸ், ஜோதிகணேசன், தாமோதரன், மாநில மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் தேவகிராணி, நிா்வாகிகள் ராஜேந்திரன், விஜயன், கோபி குமாா், பொன்னரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.