சிறுமிக்கு திருமணம்: மண்டபத்துக்கு ‘சீல்’

கே.வி.குப்பம் அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் முன்னிலையில்  திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.
கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் முன்னிலையில்  திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தைச் சோ்ந்த சிறுமிக்கும், பி.என்.பாளையத்தைச் சோ்ந்தவருக்கும் கடந்த நவம்பா் மாதம் 11- ஆம் தேதி, வடுகந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் கோட்டாட்சியா் முன்னிலையில் கே.வி.குப்பம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, மண்டலத் துணை வட்டாட்சியா் பலராமன் ஆகியோா் திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com