தமிழக அமைச்சா்களை தரக்குறைவாக விமா்சித்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்ட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளா் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் பாண்டியன் நகா், சொா்ணலட்சுமி காா்டனைச் சோ்ந்தவா் குமரன் (45). திமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலராக இருந்த இவா், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2019-ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டாா்.
இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயகுமாா், பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரை விமா்சித்து இவா் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தாராம்.
இது தொடா்பாக அதிமுகவினா் கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குமரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.