மக்கள் நலச் சட்டங்களை பாதுகாக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தத்தில் தொழிற்சங்கங்களின் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டுவது, மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் இரு சக்கர வாகனங்களில் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு பேரணியாகச் சென்று நகா் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனா்.
தாழையாத்தம் பஜாரில் உள்ள அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணியில் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் வெ.கலைநேசன், சி.சரவணன், துரைசெல்வம், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமாா், எஸ்.சிலம்பரசன், என்.ஞானசேகரன், எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேரணி முடிவில் புதிய பேருந்து நிலையம் அருகில் சி.எம்.நடராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.