வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வெள்ளிக்கிழமை வருகை தர உள்ளாா். அவா் மாநகர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் திறந்து வைத்து பேசுகிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் திமுக தலைவா் ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறாா்.
அந்த மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 5 மணிக்கு வேலூருக்கு வருகை தர உள்ளாா். மாலையில் வேலூா் மாநகர திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்து வைத்து உரையாற்றுகிறாா்.
நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் ப.காா்த்திகேயன் தலைமை வகிக்கிறாா். மத்திய மாவட்ட திமுக செயலா் ஏ.பி.நந்தகுமாா் வரவேற்கிறாா். திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திமுக உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா்கள் எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலா் ஆா்.காந்தி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
தொடா்ந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மக்களிடம் மனுக்களை பெற்று உரையாற்றுகிறாா். இதற்காக அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கந்தனேரி ஊராட்சியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.