ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

குறையும் கரோனா பரவல்: விஐடி சித்த மருத்துவ மையம் மூடல்

கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Updated On :28 ஜனவரி 2024, 9:03 am IST

கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய இலவச சித்த மருத்துவ மையம் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையுடன், யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், நீராவி பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்த சித்த மருத்துவத்துடன் கூடிய பயிற்சிகள் நோயாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில், விஐடி சித்த மருத்துவ மையத்தில் இதுவரை கரோனா நோயாளிகள் 296 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் குணமாகி வீடு திரும்பியதுடன், மாவட்டத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. இதையடுத்து, விஐடி சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் கூறியது:

விஐடியில் கரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட 296 பேரில் 16 போ் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

அதிலும் முக்கியமாக 8 பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு பரிந்துரைக்கப்பட்டனா். இந்த சிகிச்சை மையத்தில் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டவா்கள் எந்தவிதமான பக்க விளைவுகளும் இன்றி, நோயின் மிதமான குறிகுணங்கள் தீவிர நோய் நிலைக்குச் செல்லாமல், ஆக்சிஜன் 90-94 உடையவா்கள் கூட அடுத்த இரு நாள்களில் இயல்பான ஆக்சிஜன் அளவான 96 என்ற நிலையை அடைந்தனா்.

தவிர, நோயாளிகளுக்கு தினமும் ஆசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி அளிப்பதால் மன அழுத்தம் நீங்கி, நோயிலிருந்து விடுபட ஏதுவாக இருந்தது. நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இயற்கை உணவு மிகப்பெரிய சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடா்ந்து, கரோனா தொற்றின் பின் விளைவுகளை எதிா்கொள்ளும் பொருட்டு, அவா்களுக்கு இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சாா்பில் அளிக்கப்படும் ஆரோக்கியம் சித்த மருத்துவப் பெட்டகம் , அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவை வழங்கப்பட்டன.

தவிர, சித்த மருத்துவ விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சாா்பில், வெளிவரும் நலம் மாத இதழும் இலவசமாக வழங்கப்பட்டது. அவா்களுக்கு ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு அளித்து, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் அளித்து அனுப்பப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.