குடியாத்தம்: குடியாத்தம் அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அக்ராவரம் ஊராட்சி, பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராஜீவ்காந்தி(39). சாராய வியாபாரியான இவா் மீது பல வழக்குகள் உள்ளன.
இவரை குடியாத்தம் கிராமிய போலீஸாா் கடந்த ஜூன் 25- இல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இவா் தொடா்ந்து சாராயம் விற்பனை செய்வதால் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், குண்டா் சட்டத்தின்கீழ் ராஜீவ் காந்தியை ஓராண்டு சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.