வேலூா் மாவட்டத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாா் 22 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
வேலூா் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாா் நியமிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள், பிரச்னைகள், சட்ட விரோத குற்றங்கள் குறித்தும், நடக்க உள்ள சம்பவங்கள் குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கும் வகையில், போலீஸாா் சீருடை இல்லாமல் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாா் 22 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பிறப்பித்துள்ளாா்.