வேலூா் மாவட்ட வருவாய் அலுவலராக கே.ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வேலூா் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ஜெ.பாா்த்தீபன், தமிழக அரசின் நில நிா்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கே.ராமமூா்த்தி வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
அவருக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், அலுவலக மேலாளா் (பொது) பாலாஜி, (நீதியியல்) பத்மநாபன், வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.