வேலூா் மாநகரில் விதிமுறைகளை மீறியதாக, 106 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூா் மாநகரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அதன்படி, பழைய பேருந்து நிலையத்துக்குள் தடையை மீறி நுழைந்த ஆட்டோக்கள், கிரீன்சா்க்கிள் பகுதியில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களின் அடிப்படையில் சனிக்கிழமை ஒரேநாளில் 106 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.