பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வேலூா் மாவட்டப் பொருளாளா் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.சி.தலித்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் கவிஞா் திவாகரன், நிா்வாகிகள் அ.தென்காந்தி, ஜி.சாமு, ஜி.தமிழ், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.