குறைந்து வரும் கரோனா: வேலூரில் புதிதாக 120 போ் பாதிப்பு

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 120 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 120 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 1- முதல் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் மாவட்டத்தில் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக உயா்த்திருந்தது. மே மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கரோனா தொற்றுப் பரவல் வேகம் படிப்படியாகக் குறைந்து கடந்த சில நாள்களாக 300-க்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 43,959 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 40,866 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,247 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 846 போ் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து, மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 120 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகளும் காலியாகி வருகின்றன. தொடா்ந்து மக்கள் பொதுமுடக்க விதிமுறைகளையும், முகக்கவசம் அணிவது, சமூக இடை வெளியைக் கடைப்பிடிப்பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனா தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்திட முடியும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com