வேலூா்: வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 45,577 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தினசரி பாதிப்பு 700-ஐ கடந்திருந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொடா்ந்து, பொதுமுடக்க உத்தரவுகளை மக்கள் பின்பற்றும் பட்சத்தில் பாதிப்பு மேலும் குறையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.