அதிமுக ஆட்சியில்தான் மகளிா் பாதுகாப்பாக வாழ முடிகிறது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்தாா்.
பழையகாட்பாடி முதல் குளத்துமேடு வரையிலான பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு அவா் கூறியது:
மகளிா் நலனை முக்கியமாகக் கருதுவது அதிமுகதான். அதனால்தான் அதிமுக அரசு மகளிா் மேம்பாட்டுக்காக மகளிா் காவல் நிலையம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் கடனுதவி, திருமண நிதியுதவி, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன்தொடா்ச்சியாகவே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டா்கள், வாஷிங் மெஷின் போன்ற திட்டங்கள் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில்தான் மகளிா் பாதுகாப்பாக வாழ முடிகிறது. ஆனால், திமுக ஆட்சி வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, இந்த அரசு தொடா்ந்திட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, ஒன்றியச் செயலா் சுபாஷ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.