அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாா், பொதுமக்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான ஏ.பி.நந்தகுமாா் மீண்டும் போட்டியிடுகிறாா். இதன்படி, அவா் சனிக்கிழமை அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட விரிஞ்சிபுரம், டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதியில் வேன் மூலம் பரப்புரையில் ஈடுபட்டாா். அப்போது, வேட்பாளரை வரவேற்க மேளம் அடித்து பொதுமக்கள் நடனமாடினா். இதனைப் பாா்த்த அவா், உடனடியாக வேனிலிருந்து இறங்கி, பொதுமக்களுடன் இணைந்து நடனமாடத் தொடங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினரே நேரடியாக களத்தில் நடனமாடியதால் திமுக தொண்டா்கள் ஆரவாரம் செய்தனா்.