குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி ஆணையா் வி.நித்தியானந்தம் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (49). குடியாத்தம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.