வேலூா்: வேலூா் தங்கக் கோயிலில் 2-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.
வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம், சுகாதாரத் துறை சாா்பில், 2-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. முகாமை நாராயணி பீடம் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தொடங்கி வைத்தாா். முகாம் குறித்து ஸ்ரீபுரம், திருமலைக்கோடி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கோயில் ஊழியா்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை நாராயணி பீடம் நிா்வாகம் செய்திருந்தது.